குப்பிளானில் பெண்கள் தனித்திருந்த வீடொன்றினுள் புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு அவர்களிடமிருந்த பெருந் தொகையான பணம் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் குப்பிளான் தெற்கு கன்னிமார் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.பெண்கள் தனித்திருந்த வீட்டிற்கு நேற்று அதிகாலை சென்ற முகமூடியணிந்த நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.வீட்டின் உள்ளே சென்ற இவர்கள் மூன்று இலட்சம் ருபா பெறுமதியான நகை மற்றும் பணம் உட்பட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இசம்பவத்தின் போது குறித்த வீட்டில் மூன்று பெண்கள் மட்டுமே இருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு பெண்களே தனித்திருந்த வீட்டினுள் கொள்ளைக் கும்பல் சென்றதனால், அங்கு பெண்கள் தான் தனித்திருக்கின்றார்கள் என கொள்ளைக்கும்பலுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன என மக்கள் அச்சத்தில் தெரிவித்துள்ளனர்.

Comments